வாழ்வியலை மேம்படுத்தும் இரண்டு பயிற்சிகளில் பங்கேற்க மறவாதீர்…


மூலிகை மருத்துவ பயிற்சி நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும் பலர் மிக ஆர்வமாக எப்போது நடத்தப்போகிறீர்கள் என்றார்கள். இப்போது தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தமிழ்நிலம்  தமிழ்ப்பண்ணையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் பயிற்சி நடைபெற உள்ளது.  

ஆர்வமுள்ள பலர் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பயிற்சியில் கலந்துகொள்வதாக உறுதி செய்திருக்கிறார்கள். இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைவாக பதிவு செய்து கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க 9551486617,  9340047779 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம். 

Must Read: கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.18000 மதிப்புள்ள உதவிகள்… 

இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டும், மரங்கள் வளர்க்க வேண்டும் என்று நம்மில் பலர் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால், உண்மையில் இத்தகைய பயிற்சி முகாம்கள்தான் இதுபோன்ற எண்ணங்களுக்கு முழு வடிவம் கொடுக்கின்றன. 

வாகன போக்குவரத்து, நெரிசல், வாகனங்கள் வெளியிடும் புகை என முற்றிலும் வேறொரு சூழலில் வசிக்கும் நாம் அவற்றைவிட்டு விலகி ஒருநாள் இதுபோன்ற பயிற்சியில் பங்கேற்று நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளலாம். வாருங்கள்... நல்லதொரு வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இயற்கைச் சாயங்கள் தயாரிப்புப் பயிற்சி

தற்சார்பு வாழ்வியலில் பருத்தி ஆடைகள் முதன்மை இடம் வகிக்கின்றன. ஆனாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் செயற்கை ராசாயனச் சாயங்கள் கடுமையான தோல் நோய்களை உண்டாக்குவதோடு நமது மண்ணையும், நீரையும் மாசுபடுத்துகின்றன.

உலகில் நீரை மாசுபடும் முதல் தொழில் வேதிச்சாயத் தொழிலாகும். வேகமாக சாயம்போட வேண்டும் என்ற நோக்கில் மிக மோசமான ரசாயனங்களைப் பயன்படுத்தி ஆறு குளங்கள் முதல் நிலத்தடி நீர்வரை அனைத்தும் நஞ்சாக்கப்படுகின்றன. 

செயற்கைச் சாயங்கள் நிலத்தில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நமது உடல்நலத்திலும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அமோனியா, குளோரின் மற்றுமல்லாது கனஉலோகங்களும் இவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. 

வாழ்வியல் பயிற்சிகள்

இவை கடுமையான பாதிப்புகளை நம்மை அறியாலேயே நமது தோலில் ஏற்படுத்துகின்றன. ஏறத்தாழ சாயமிடுவதில் 72 ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 30க்கு மேல் நச்சுத்தன்மை கொண்டவை. சிறு குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை.

இந்த நஞ்சுகளில் இருந்து விடுபட தாவரங்களில் இருந்து குறிப்பாக இலைகள், பூக்கள், பட்டைகள், வேர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் இயற்கைச் சாயங்கள் உதவுகின்றன. இயற்கைச் சாயமிடும் தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

Must Read: எவ்வித காரணங்களும் இன்றி சிறுநீரகம் பாதிக்கப்படுவது அதிகரிப்பா?

இயற்கைச் சாயமிடும் கலையைக் கற்றுக் கொண்டு இயற்கைச் சூழலைப் பாதுகாக்க பலரும் முன்வர வேண்டும். அதற்காகப் பயிற்சி முகாம் ஒன்று பொதிகைச் சோலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவணி 23-24 (9 &10 - செப்டம்பர், 2023)ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 

முன்பதிவு அவசியம், 20 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். அனைத்து விவரங்களுக்கும் தொடர்பு கொள்ள... சரவணன்: 80722 15581 பொதிகைச்சோலை வாழ்வூர், தலையணைச்சாலை, வாசுதேவநல்லூர், தென்காசி மாவட்டம்

#healthylifestyle #learnhealthylifestyle  #lifestyletraining 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments