மரக்கன்றுகள் நட ஏற்ற மாதம் எது தெரியுமா?

பராமரிப்பு உள்ள நிலமாக இருந்தாலும் சரி அல்லது மானாவாரி மேட்டு நிலம் ஆயினும் சரி மரக்கன்றுகள் வைக்க நாங்கள் தேர்ந்தெடுப்பது அதிகம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதமே.

மேட்டூர் அணையில் சரிந்த தண்ணீர் மட்டம்… டெல்டா சம்பா சாகுபடி குறைந்தது..

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்ததால் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்தது.

மருத்துவ காளான்களை உருவாக்கும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம்…

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் பல புதிய வேளாண் பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டில் புதிய ரக மருத்துவ காளான்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு… இனி செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டின் உணவு ஆதாரமாகத்திகழும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் போதுமான பாசன தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

“நான் ஏன் விவசாயி ஆனேன்..” தோனியின் வேளாண் ஆர்வம்

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தன்னை ஒரு விவசாயி என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி அவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் முதல் முழுநேர விவசாயியாக மாறினார் என்று கூறப்படுகிறது.

மாடித்தோட்டம் அமைக்க வேண்டுமா? தோட்டக்கலை துறை வெளியிட்ட அறிவிப்பு...

வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் விதை, பை, உரம், ஆகியவை மானிய விலையில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

வேளாண்மை பயின்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு என்ன தெரியுமா?

வேளாண்மை பயின்ற இளைஞா்கள் தொழில்முனைவோர் ஆவதற்கு மானியம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசின் அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோடைகால இயற்கை உணவுகள்; உடல் சூட்டை குறைக்கும் நுங்கு, வெண்பூசணி…

கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்னவிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 இயற்கை உணவுகள்

டிஜிட்டல் யுகத்தின் வேகத்துக்கு இணையாக பரபரவென்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இந்த பரபர வாழ்க்கையில் நாம் இழப்பது சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளைத்தான். நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை சரியான சமநிலையில் உணவின் மூலம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்

தர்ப்பை, துத்தியின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

தொன்மையான தாவரமான தர்ப்பை வளரும் இடங்களில் மிதமான குளிர்ச்சியைத் தருவதுடன் மன அமைதியையும் தரும். மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி மண்பானையில் போட்டு வைத்துக் குடித்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

கொரோனா காலத்து தொப்பையை குறைக்க இயற்கையான வழிமுறைகள்…

கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பொது ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கியிருந்த பலருக்கு தொப்பை போட்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள் வித்தியாமில்லாமல் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இயற்கை தந்த அருமருந்தான தேனில் கலப்படத்தை கண்டறிவது எப்படி

தேன் ஒரு அற்புதமான இயற்கையின் கொடை. பண்டைய காலத்தில் வனத்தில் வாழ்ந்த மக்கள் அல்லது இப்போதும் கூட பழங்குடியினர் உணவில் ஏதோ ஒரு வகையில் தேனை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவில் தேன் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தோல் நோய்களுக்கு நறுவிலி,புற்றுநோய்க்கு புங்கம்!

நாம் வாழும் இயற்கையை சுற்றி உள்ள தாவரங்கள், மரங்கள், செடிகளில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் பொதிந்துள்ளன. பல மருந்துகளுக்கு ஆதாரமாகவும் திகழ்கின்றன.

கூவம் கரையோரம் அரிய வகை மூலிகைகள்… மூலிகை தோட்டம் அமைக்குமா அரசு?

கூவம் ஆற்றங்கரையில் உள்ள மூலிகைகள் பற்றி அறிவதற்காக சென்னை அண்ணாசாலையை ஒட்டிய கூவம் ஆற்றின் சில பகுதிகளில் நான் வலம் வந்தேன். கூவம் ஆற்றில் சாக்கடைக் கழிவுநீரால் நாற்றமெடுக்கிறது. ஆனால் அதன் கரைகளில் வளர்ந்து கிடக்கும் மூலிகைகளோ வாசனை வீசுகிறது.

கோமியம் சில சர்ச்சைகளும், பின்னணி காரணங்களும்..

பசுவின் கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என்றும் கேன்சர், கொரோனா என்று பல நோய்களை தீர்க்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பசு கோமியத்தின் உண்மை நிலவரம் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

123