
நோயாளியின் எமோஷனலை வியாபார கண்ணோட்டத்துடன் அணுகும் மருத்துவமனைகள்…
இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை கொடிசியா ஹாலில் கோவை டாக்டர் T.ரவிக்குமார் M.D. (Medical Superintendent, ESI Hospital Coimbatore) அவர்களின் புதல்வி டாக்டர் பிரசாந்தி M.D க்கு திருமணம் நடந்தது.
டாக்டர் ரவிக்குமார் அவர்கள் எனது வாசகர் மட்டுமல்ல, என் மீது பேரன்பும் மதிப்பும் கொண்டவர். ஒரு மாதத்துக்கு முன்பே எனக்கு அழைப்பு வைத்து, கண்டிப்பாக வரவேண்டும், என்று கேட்டுக் கொண்டதால், நான் வரவேற்புக்கு சென்றேன்.
பொதுவாக நான், ஓரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றால், அங்கே ஒரு அரை மணி நேரம் மட்டுமே இருப்பது வழக்கம்.ஆனால் அன்றைக்கு அவருடைய மகள் திருமண வரவேற்புக்கு சென்ற நான் மாலை 6 மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் அங்கேயே இருந்தேன்.
திருமண வரவேற்புக்கு பெரிய அளவில் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. அதில் 70% பேர் டாக்டர்கள். எல்லா விதமான நோய்களுக்குமான சிறப்பு டாக்டர்கள். ஏதாவது ஓரு துறையில் பிரபலமான டாக்டர் வரும்பொழுதெல்லாம், அவரை அழைத்துக் கொண்டு வந்து, எனக்கு அறிமுகம் செய்து வைத்துக் கொண்டேயிருந்தார் ரவிக்குமார்.
Must Read: வளரிளம் பருவத்தினருக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்…
அப்போது நான் அந்த டாக்டர்களிடம் அவர்களின் துறையைப் பற்றி, எனக்குள் இருக்கும் சில சந்தேகங்களை கேட்டேன். அவர்களும் பதில் சொன்னார்கள். இப்படி அன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட டாக்டர்களை நான் பார்த்து பேசி இருப்பேன். அவர்களிடம் பேசிய போது அவர்கள் சொன்ன ஒரே ஒரு உண்மை இதுதான்.
இன்றைக்கு நோயாளிகள் அதிக அளவிலே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், மாறிப் போன நம்முடைய உணவுப் பழக்கம்தான். இந்த உணவு பழக்கம் பல்வேறு நோய்களுக்கு காரணமாகி விடுவதால், அவர்கள் ஏதேனும் ஒரு நோய் வாய்ப்பட்டு,ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள்.
" எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. காப்பாத்துங்க டாக்டர்" என்கிற இந்த ஒற்றை வாக்கியம் போதும் சில மருத்துவ மனைகளுக்கு. இந்த எமோஷனலை, அந்த சில மருத்துவமனைகள் வியாபார கண்ணோட்டத்துடன் அணுகி, நோயாளிகள் வசதி படைத்தவர்களாக இருந்தால், தேவையற்ற பல வகையான டெஸ்ட்கள் எடுக்க வைத்து, லட்சக்கணக்கில் பணம் பார்த்து விடுவார்கள்.
இதில் மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பெரிய ஹாஸ்பிடல்களின் நிர்வாகத்தை, குறை சொல்லி பயனில்லை. ஏனென்றால் அவர்கள் நவீன மருத்துவ உபகரணங்களை, வங்கிகளில் கோடிக்கணக்கில் கடனாக வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்துவதற்காக, நோயாளிகளை கட்டாயமாக ஸ்கேன் போன்ற டெஸ்ட்களை எடுக்க வைக்கிறார்கள். இறுதியாக......தலைசிறந்த மருத்துவர் ஒருவர், சுக்குப் பால் சாப்பிட்டுக்கொண்டே, என்னிடம் சொன்னதுதான்ஹைலைட்.
Must Read: வெரிகோஸ் வெயின் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கம்…
மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டால், உடனடியாக மல்டி ஸ்பெஷாலிடி போன்ற பெரிய ஹாஸ்பிடல்களுக்கு செல்லாமல், அருகில் இருக்கும் சிறிய க்ளீனிக்களுக்கு சென்று, அங்கேயிருக்கும் டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டாலே, குணமடைந்து விடலாம் .ஃபீஸ் கூட 100 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்குள்தான் இருக்கும்.
சிறிய க்ளீனிக் வைத்து நடத்திக் கொண்டிருக்கும், டாக்டர்களிலும் திறமையான, டாக்டர்கள் இருக்கிறார்கள் என்பதை, மக்கள் புரிந்து கொண்டாலே போதும், வீணான தேவையற்ற மருத்துவச் செலவுகளை,தவிர்க்கலாம் என்று சொல்லி இதை ஃபேஸ்புக் கில், எழுதுங்கள் என்றார் அந்த மருத்துவர்.
நன்றி; எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார்
#hospitalfees #pvthospitals #multispecialityhospitals
ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments