வானகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நம்மாழ்வாரின் 85 வது பிறந்தநாள் விழா


நஞ்சில்லா உணவையும், ஆரோக்கியாமன சூழலையும் அனைத்துயிர்களுக்கு உறுதி செய்ய வேண்டி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமான பயணம் செய்து, தன் சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு கல்வி வழங்கியவர் ஐயா நம்மாழ்வார் என்பது நாமறிந்ததே. அவர் விதைத்துச் சென்ற விதைகளை பல்கிப் பெருகி தினசரி பேசு பொருளாக உணவும், சூழலியலும் மாறி நிற்கிறது.

உணவு உற்பத்தியில், அனைவருக்கும் உணவு உத்திரவாதம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் மானாவாரி உழவர்களை ஒருபடி மேலே உயர்த்துவது தான் தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார், அதன் தொடர்ச்சியாகத் தான் #வானகத்தின் அனைத்து செயற்பாடுகளும் இருந்து வருகிறது, 

இப்படி சூழலியல், கல்வி, மருத்துவம் என எண்ணற்ற மாற்றங்களையும், முன்னோர்கள் உழைப்பின் அறுவடையும் நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம், அதை நினைவு கூறும் விதமாக தான் வருடத்தில் இரண்டு முறை வானகத்தில் கூடுகிறோம், வரும் ஏப்ரல் ஆறாம் தேதியும் கூட இருக்கிறோம்.

Must Read: உயிர்ம வேளாண் கொள்கையில் வலுவான திட்டங்கள் இல்லை

அந்த நிறைவான நாளில் உழவு, சூழலியல், மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் இந்தச் சமூகம் பயனுற வாழும் நன் நெஞ்சங்களை அறிமுகம் செய்து பாராட்டியும், #நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறோம். 

நம்மாழ்வாரின் பிறந்த நாளை மரபு விதைத்திருவிழாகவும் கொண்டாடி வருகிறோம், மரபு விதைக் காப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களையும் பாராட்டும் பொருட்டும் இந்த நிகழ்வு நடந்து வருகிறது, இந்த ஆண்டும் வழக்கம் போல மரபு இசை, மரபு கலைகளோடு அனைவரும் கூடி உறவாடுவோம், உரையாடுவோம். 

நம்மாழ்வார் 85ஆவது பிறந்த நாள் விழா

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 06ஆம் தேதி  வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5வரை கரூர் மாவட்டம்.கடவூர், சுருமான்பட்டியில் உள்ள நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவமான வானகத்தில் , நம்மாழ்வாரின் 85 வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. 

வழக்கம் போல் இந்தாண்டும் விதைக்கண்காட்சியில் சிறு தானியங்கள் விதை, 1200க்கும் மேற்பட்ட மரபு நெல்ரகங்கள், காய்கறி ரகங்கள், கிழங்கு வகைகள், மூலிகைகள்,  பயறு, எண்ணெய் வித்துக்கள் விதை காட்சிப்படுத்துதல் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு #விருந்தினர். Dr. மார்கண்டன் முன்னாள் துணை வேந்தர், காந்தி கிராம பல்கலைகழகம் அவர்களும், முன்னோடி உழவர்களும், விதை சேகரிப்பாளர்களும், சுற்றுச் சூழலியலாளர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள்.

Must Read: தினமும் மாதுளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

மேலும் மக்கள் பங்களிப்போடு கூடிய நம்மாழ்வார் விருது ஆண்டு தோறும் உழவு, சூழல், மருத்துவம் மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக செயலாற்றும் நண்பர்களுக்கு நம்மாழ்வார் விருதும், மக்களின் பங்களிப்போடு அவர்களுக்கு தொகையும் வழங்குவது சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது, இந்த ஆண்டும் மக்களின் பங்களிப்போடு விருதுகள் வழங்க இருக்கிறோம். 

தாங்கள் பங்களிக்க விரும்பும் தொகையை, இந்த வங்கிக் கணக்கில் செலுத்தி அந்த தகவலை எங்களுக்கு WhatsApp / Email மூலமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள்.

Nammalvar Ecological Foundation

A/C No : 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank : Indian Overseas Bank 

Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu

+9194458 79292 , 86680 98492,  86680 98495

info@vanagam.org

அனைவரையும் அன்போடு வானகம் அழைத்து மகிழ்கிறது.#வானகம்

#nammalvarbirthday  #vanagam #organicfarming

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments