வேளாண்மை நிகழ்வுகள், தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்…


இயற்கை வேளாண் நிகழ்வுகள் 

இயற்கை வாழ்வியல் பயிற்சிகள் 

இயற்கை வேளாண் விவாதங்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் இயற்கை வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

வானகம்  நடத்தும் இரண்டு நாள் "மரபுக் கலை பயிற்சி" 

நம் மரபை காக்கும் பொருட்டு தமிழகம் முழுவதம் "வானகம் - நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்" தொடர்ச்சியாக பயிற்சிகளை ஒருங்கணித்துக் கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து வரும் 28,29 ஆகஸ்ட் - 2021  ல் வானகத்தில் மரபு கலை பயிற்சி நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தில் மறுபயன்பாட்டு உருவாக்கத்திலும் முக்கியமாக தென்னை  பொருட்கள் வைத்து  வீட்டுக்கு தேவையான பொருட்கள் , குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை கைவினை கலையாக்கும்  முறைகளை கவின் கலைக்கூடம் ஆனந்தபெருமாள் மற்றும் குழுவினர்  கலந்துகொண்டு  பயிற்சி அளிக்கவுள்ளார்கள். 

வானகத்தில் மரபு கலை பயிற்சி

தற்சார்ப்பாக கலை பொருட்கள் செய்ய ஆர்வம் உடைய நண்பர்கள் மற்றும் மரபு கலைகளை பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் இப்பயிற்சியில் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  பயிற்சியை வானகம் பயிற்சி ஒருங்கிணைப்பு குழுவினர் வழங்குவார்கள். பயிற்சி வருகிற 28 ஆகஸ்ட் 2021 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி  29 ஆகஸ்ட் 2021 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

பயிற்சி நிகழ்விடம் :

வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்  சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.

பயிற்சியில்  30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. பயிற்சி நன்கொடை : ரூ 1800/- (non-refundable) தங்குமிடம் உணவு வழங்கப்படும்.(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)  முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு

Nammalvar Ecological Foundation

A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

முன்பதிவுக்கு:  8825810072  / 9445879292 

குறிப்பு : அரசு அறிவு ருத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும். வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது.

பாலித்தின் பைகள், சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும்  ரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு https://vanagam.org  https://vanagam.page.link/app

 


Comments


View More

Leave a Comments