நாக்கை சப்புகொட்ட வைக்கும் மீன் உணவு திருவிழா சென்னை தீவுதிடலில் இன்று முதல் 28 ம் தேதி வரை..
கடல் உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானவைதான். அதிலும் கடல் உணவுகளில் முதன்மையான மீன் உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. அதிக கொழுப்பு உள்ளவர்கள், ஆட்டிறைச்சி, கோழிஇறைச்சி சாப்பிட வேண்டாம் என சொல்லும் மருத்துவர்கள் கூட மீன் உணவு சாப்பிடுங்கள் ஆரோக்கியமானது என்று அறிவுறுத்துவது வழக்கம். மீன் உணவில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் மீன் உணவுகளில் உள்ளது. இது ரத்த அழுத்த த்தை குறைக்கும், மாரடைப்பை தடுக்கும். எனவே உடல் ஆரோக்கியத்துக்கு மீன் உணவுகளின் பங்கு முக்கியமானவையாகும்.
இப்போது சென்னை தீவுத்திடலில் இரண்டாவது ஆண்டாக தமிழக அரசின் மீன் வளத்துறையின் சார்பில் மீன் உணவு திருவிழா தொடங்கி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மீன் உணவுத்திருவிழா நடைபெற உள்ளது. நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் மீன் உணவுகளை உண்ண தீவு திடலுக்கு வரலாம். மீன் உணவின் அவசியம் குறித்தும், மீன் உணவுகளை சமைப்பது குறித்தும் பிரபல சமையல் கலைஞரின் உரையும் இடம் பெறுகிறது. மீன் உணவுகளை ருசிப்பது மட்டுமின்றி, மீன் உணவை சமைப்பது குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.
சமையல் கலை படிக்கும் மாணவர்கள் மற்றும் மீனவ குப்பங்களின் மகளிர் பங்கேற்கும் மீன் உணவு சமையப்போட்டியும் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இந்த உணவுத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். மீன் வளத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் தலைமை வகிக்கிறார். மீன் வளத்துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்கிறார். மீன் உணவை சுவைக்க விரும்புவோர் வயிற்றை காலியாக்கிக் கொண்டு தீவு திடல் வாருங்கள். இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டும் தான் மீன் உணவு திருவிழா நடக்க உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
-பா.கனீஸ்வரி
#FishFoodFestival2021 #FishFoodFestival #ChennaiFishFoodFestival #FishFoodFestival
Comments