மதுரையில் செப்டம்பர் 22-26 தேதி வரை அகிம்சை சந்தை நடைபெறுகிறது…


மதுரை மாநகரில் உள்ள காந்தி மியூசியத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அகிம்சை சந்தை என்ற இயற்கை திருவிழா நடைபெற உள்ளது. இதனை  அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு, காந்தி மியூசியம் மற்றும் செஸி நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக நடத்துகின்றன. மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அகிம்சை சந்தை நடைபெறும்  அகிம்சை சந்தையில் உள்ளூர் வாழ்வாதாரம், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உணவக, விழிப்புணர்வு அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. 

மதுரையில் நடைபெறும் அகிம்சை சந்தை   

தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி, இதர மாநிலங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வேளாண் விளைபொருட்கள், மதிப்புகூட்டிய உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. 

Must Read: காய்ச்சலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

இது மட்டுமின்றி இயற்கை சாயமிடுதல், தற்போது பிரபலம் ஆகி வரும் மாடித்தோட்டம், சிறுதானிய சமையல் ஆகியவை குறித்தும்  விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் விவசாயத்தின் அடிநாதமாக விளங்கும் காலநிலை மாற்றம் குறித்தும் விளக்கம் இடம் பெற உள்ளது. இயற்கை விவசாயம், கிராமப்பொருளாதாரம், கைவினைப்பொருட்களின் மேம்பாடு குறித்த கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன. 

#AgriEvent   #OrganicAgriculture   #NatureLifeStyle  #OrganicFoods  #SiddhaMedcine

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments