கடுக்காய் நன்மைகள்; தலைவலி இதய நோயில் இருந்து விடுதலை பெறலாம்…
காலையில் இஞ்சி கடும் கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும் கோலை விசி குலாவி நடப்பானே கடுக்காய் சாப்பிட்டால் நெடுகால் வாழலாம் என சித்தரகள் சொல்வார்கள். கடுக்காயில் அந்த அளவுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
15 கிராம் கடுக்காய் பொடியுடன் ஐந்து கிராம் கிராம்பு பொடி சேர்த்து 100 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து அதிகாலையில் கொடுக்க வயிற்று வலி இன்றி இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழியும்
Must Read: முருங்கையில் தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள். விற்பனை
இம்முறையை அவ்வப்போது பயன்படுத்தி வர அதிக வெப்பத்தை தணிக்கும் இரைப்பை பலப்படும் புலன் பொறிகளை சரிவர இயங்கும் வாயு மூலம் பவுத்திரம் வீக்கம் தலைவலி இதய நோய் ஆகியவை குணமாகும் ரத்தம் தூய்மையடையும்
கடுக்காய் பொடியை பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்துவர ஈறு வலி வீக்கம் ரத்தம் கசிதல் ஆகியவை தீரும்
கடுக்காய் நெல்லிவற்றல் தான்றிக்காய் சுக்காட்டி இவற்றை செம நடை பொடித்து தேங்காய் எண்ணெயில் இளகலாக அரைத்து ஆறாத புண்களில் பூச அவை குணமாகும்
நன்றி: ASNசாமி ஆதனூர் 9442311505
#KadukkaiBenefits #KadukkaiHealthy #PattiVaithiyam

Comments
View More