
ராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒருமாதமாகவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களின் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் சமையல் எண்ணைய் தரமற்ற முறையில் விற்கப்பட்டதாக கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பகுதியில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று மாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள சிறிய, பெரிய உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதே போல கோயில் அருகே பக்தர்களுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தின் போதும் தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அன்னதானத்தின்போது கெட்டுப்போன உணவுகளை வழங்கக்கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Must Read: ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்யும் ரோஜா குல்கந்து
ஆய்வின்போது உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டன. ஆய்வகங்களில் அந்த உணவுகள் பரிசோதிக்கப்பட உள்ளன. தரமற்ற உணவு என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்கு அபராதம் விதிப்பதுடன் கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-ரமணி
#FssaiRaid #FssaiRaidInRameswaram #FssaiRaidInRestaruants
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments