
சித்த மருத்துவத்தில் வெளிசிகிச்சையுடன், உள சிகிச்சையும் முக்கியம்...
மூட்டு வலியால் அவதிப்பட்டு என்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி சிகிச்சைக்கு முன் கடுமையான வீக்கம் வலியினால் ஏற்பட்ட மனஉளைச்சலுடன் காணப்பட்டார். நோயாளி ஏற்கனவே சித்த மருந்து எடுத்தும் எந்த மருந்தும் பயனளிக்கவில்லை.
சித்த மருத்துவரின் உறவினர் என்பதாலும் ஏற்கனவே ஒற்றை மருந்து முறை பெருமருந்துகளும் பயனளிக்கவில்லை என பரிந்துரைத்த சித்த மருத்துவர் கூறினார். நோயாளிக்கு Rh factor அதிகமாக இருந்தது. Crp இயல்பாக இருந்தது. நோயாளியை வரவழைத்து நாடியை கவனிக்கையில் வாதம் அதிகமாகவும் பித்தம் இயல்பை விட குறைவாகவும் இருந்தது.

மீண்டும் ஒரு மண்டல மருந்து சிகிச்சைக்கு முன் நடக்க இயலாமை கடுமையான வலி கை விரல் மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் வீக்கம் போன்ற மிக கடுமையான குறிகுணங்கள் இருந்தது . தற்போது குறிகுணங்கள் வெகுவாக குறைந்து வீக்கம் இல்லை வலியும் வெகுவாக குறைந்து நடக்கிறார்
சித்த மருத்துவத்தில் கூறப்படும் பிணியணுகா விதியான பேதியினால் வாதம் தாழுமே என்ற அடிப்படை விதியை இந்த நோயாளிகளுக்கு முறையாக கடைபிடித்தோமேயானால் சரியான முறையில் முடிக்கப்பட்ட மருந்தை சில கற்ப மூலிகைகளுடன் கலந்து கொடுக்கும் போது நன்றாகவே மருந்து வேலை செய்யும்.

புளித்த மாவு பொருட்கள் அதிகமான மாவுச்சத்து புரத சத்து இவை எல்லாம் குறைக்கனும் அல்லது தக்க விகிதாச்சாரத்தில் உண்ண அறிவுறுத்தலாம்.
மருத்துவ சோதிடம்.
நாள்பட்ட மருந்து உண்டுள்ளமை மேலும் ஏற்கனவே சித்த மருந்து எடுத்து கொண்டது இதையெல்லாம் கணக்கில் கொண்டு இவர்களின் நட்சத்திரத்தைக் கேட்டேன். திருவாதிரை நட்சத்திரம் மேலும் சுயசாதகத்தில் சுக்கிரன் உச்சமாகவும் இருந்தது. திருவாதிரை நட்சத்திரகாரர்களின் எண்ண அலைகள் காற்றை போன்றது. தென்றலாகவும் இருக்கும் புயலாகவும் இருக்கும்.
Must Read: அம்மா உணவகங்கள் தற்போதைய நிலவரம்...
இவரின் செய்கைகள் அமைதியாக இருக்க மாட்டார்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பார்கள். இவர்கள் உடல் அமைதியாக இருக்க நினைத்தாலும் உள்ளம் அமைதி பெறாது ஓடிக்கொண்டிருக்கும். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகளில் அழுத்தம் உருவானால் இவர்களால் அதிலிருந்து மீண்டு வர இயலாது தெரியாது.
எனவே இவர்களுக்கு மருந்துடன் உளசிகிச்சையும் தேவை என்பதை உணர்ந்தோம். அவர்களை மெல்ல அவர்களுக்கான தீர்வு அவர்களிடமிருந்தே பெறப்பட்டது. மீண்டும் மருந்துகளை பரிந்துரைத்தோம். முடக்குவாத நபர்களுக்கு உடல்நலத்திற்கான சிகிச்சையுடன் உளநலத்திற்கான சிகிச்சையும் தேவை என்பதை மருத்துவர்கள் நினைவில் கொள்க.
அவர்களின் வலியை நம்மால் வாங்கி கொள்ள இயலாது ஆனால் நிச்சயம் புரிந்து கொள்ள இயலும். எனவே அதன்படி நோயாளிகளை அணுகுங்கள் நிச்சயம் தீர்வு கிடைக்கும். தற்போது நோயாளிக்கு குறிகுணங்கள் குறைந்துள்ளது. இருப்பினும் அறிவியலின் பார்வையில் ஆதாரம் தேவை என்று தானே பொதுபுத்தியில் உள்ளது. நோயாளிக்கும் சிறுநம்பிக்கையை கொடுக்கும் என்றும் பார்க்கப்பட்டது
இளம் தலைமுறையினர் நிறைய பேர் பதிவுகளை பார்த்து என்னிடம் சந்தேகங்களை கேட்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இவையெல்லாம் சித்தர்வழியில் நடந்தால் அனைத்தையும் அவர்கள் வழிகாட்டுவார்கள்.பகிர பகிர அன்பு மட்டுமல்ல அருளும் பெருகும்.இங்கே மருந்தில் பெரிய மாற்றம் தேவையிருக்காது நோயாளியின் தேகநிலையும் அவர்களின் தேகஅமைப்பிற்கான பிணியணுகா விதியுமே சிறு மாற்றம் ஏற்படும் அவ்வளவு தான்.
இது தனியார் பயிற்சி பெறும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் இயல்பிலே நுணுக்கங்கள் நிறைய புலப்படும். அந்த நுணுக்கங்களை நான் மட்டுமே வைத்து கொள்ள சித்தர்கள் என்னை ஒருநாளும் அனுமதிக்க மாட்டார்கள். அப்படியே வைத்திருந்தாலும் வேறு எந்த ரகசியங்களையும் எனக்கு வெளிப்படுத்த மாட்டார்கள். எனவே நமக்கு தெரிந்ததை புரிந்ததை பகிர்வோம். என்னை வழிநடத்தும் சித்த மருத்துவத்திற்கும் சித்தர்களுக்கும் நன்றிகள்.
நன்றி; மரு.கீதாமோகன்
#SuccesOfShiddha #SuccesStoryOfShiddha #ShiddhaTreamentSucces
Comments