
மலச்சிக்கல், கபம், தோல் நோய்களுக்கு மூலிகை மருத்துவம்…
மூலிகை ஆராய்ச்சியாளர், ஆர்வலர் எம்.மரியபெல்சின் கூறும் எளிய மருத்துவத் தகவல்களை அவ்வப்போது ஆரோக்கிய சுவை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றோம். இப்போது அவர் கூறிய சில அரிய மூலிகை தகவல்கள் மற்றும் அதன் உடல்நல பலன்களை இப்போது பார்க்கலாம்.
உடல் கழிவு வெளியேற மூங்கில் இலை சாறு
மூங்கிலுக்கு பொதுவாக மருத்துவ குணங்கள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் மூங்கில் இலைகளின் சிறப்பு மருத்துவ குணம் பற்றிய தகவல் கிடைத்தது. மூங்கிலின் இளம் இலைகளை நீர் விட்டு கொதிக்கவைத்து காலை அல்லது மாலை நேர தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். கசாயமாக... அதாவது இனிப்பு எதுவும் சேர்க்காமல் அருந்தும்போது முகத்தை சுளிப்போம்.
Must Read: #ThisdayHealthyHerbs தாகம் தணிக்கும், மன அழுத்தம் போக்கும் ஆரா கீரை
அதற்குப் பதிலாக இலையுடன் சிறிது மிளகு சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். இப்படி அருந்துவதன்மூலம் உடல் கழிவுகள் வெளியேறும். தினமும் குடிக்கத் தேவையில்லை. அவ்வப்போது குடித்து வரலாம். கண்ணுக்குத் தெரியாமல் அது வெளியேறிக்கொண்டிருக்கும்.
மலசிக்கல் தீர கடுக்காய் தோல், கிராம்பு கசாயம்
கடுக்காய்த்தோலுடன் கிராம்பு சேர்த்து கசாயம் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கழிவுகள் வெளியேறும். கடுக்காயுடன் கிராம்பு சேர்த்துச் சாப்பிடுவதால் ஓயாத விக்கல் நிற்பதுடன் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். இது சிலருக்கு கொடுத்து பார்த்ததில் பலன் கிடைத்திருக்கிறது.
கடுக்காயுடன் கிராம்பு சேர்த்துச் சாப்பிடுவதால் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும். தேங்காய்ப்பாலுடன் கடுக்காய்த்தூள் அல்லது கிராம்புத்தூள் சேர்த்துக் குடித்தாலும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.
நல்லவேளைக் கீரை சாப்பிட்டால் கபம், தோல் நோய் தீரும்
நல்லவேளைக் கீரையின் பூக்கள் வெள்ளைநிறத்தில் சிறிய சூல்கள் நிறைந்து காணப்படும். இது கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் தானாக வளரும் ஒரு மூலிகை. சென்னையில் இந்தக் கீரையை பரவலாக பார்க்க முடியும்.
உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியது என்பதால் வறுமையில் வாடும் குடும்பத்தினர் இந்தக் கீரையை மட்டுமே சமைத்துச் சாப்பிட்டு பசி போக்கியதாக சிறுபாணாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. வேளைப் பூவுடன் தூதுவேளைப் பூ சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து சாப்பிட்டால் கபம், வாதம் போன்றவை சமநிலை அடையும்.
வேளைக்கீரையுடன் குடமிளகாய், பூண்டு சம அளவு எடுத்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும். இதன் இலைச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, புண்களின் மீது தடவினால் புண் சீக்கிரம் ஆறும். முழுத் தாவரத்தையும் வெள்ளைப் பூண்டு சேர்த்துக் காய்ச்சிப் பூசினால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும்.
Must read: #ThisdayHealthyHerbs தொண்டை கரகரப்பு வாய்ப்புண்ணை தீ்ர்க்கும் வாய்விளங்கம் சாறு
இதன் பூக்கள் மற்றும் கொழுந்து இலைகளைக் கசக்கி சாறு பிழிந்து தாய்ப்பாலுடன் சேர்த்துக் கொடுத்தால் சளி, இருமல் குறையும். தலையில் கபம் சேர்ந்து பாரமாக இருக்கும்போது, இதன் இலைகளை அரைத்து சாறு பிழிந்து சக்கையைத் தலையில் வைத்துக் கட்ட வேண்டும். அத்துடன் அதன்மீது சிறிய பானையைக் கொண்டு மூடி, அதன் மீது ஒரு துணியால் கட்டினால் தலைபாரம், தலைவலி சரியாகும். இப்படியாக பல்வேறு பலன்களைக் கொண்டது நல்லவேளை.
- எம்.மரிய பெல்சின் (9551486617)
#FewHearbalManyBenefits #HearbalBenefits #PattiVaithiyam #TakeHeabal
Comments