
சைக்கிளில் இட்லி மாவு விற்கும் மதுரை சகோதரர்கள்…
மதுரையில் கிருஷ்ணாபுரம் காலனி & மகாத்மா காந்திநகர் பகுதிகளில் க்கிக்கிங்.. கீங்.. கீங்.. கீங்.. விநோதமான ஹாரன் ஒலித்தால் பெண்கள் வீட்டிலிருந்து பாத்திரத்தோடு ஓடி வருகிறார்கள். அந்த ஒலி வருவது ஒரு சைக்கிளில் இருந்து.
முன்னொரு காலத்தில் தெருக்களில் வீட்டுக்கு வீடு மணியடித்தபடி பால்காரர் வந்து பால் ஊற்றுவது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிலிருக்கிறது? அதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணியது போல் இந்த காலத்தில் ஓர் வியாபாரம் அதே சைக்கிளில்.ஆம்,.. வீடு வீடாக இட்லி மாவு தருவது தான்
இந்த வியாபாரம் வினோதமான ஒலியெழுப்பும் அந்த பிளாஸ்டிக் ஹாரன் கிளிப்பச்சை நிறத்தில் மதுரை மீனாட்சியம்மன் கையில் அமர்ந்த கிளி போல சைக்கிள் ஹேண்டில்பாரில் (சைக்கிள் பெல் மாட்டும் இடத்தில்) அமர்ந்துள்ளது.
Must Read: தக்காளி விலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான குரல் வலுப்பெறாதது ஏன்?
பின்னால் கேரியரில் பெரிய சில்வர் அண்டாவில் மாவு அதன் மேல் கயிறுகட்டி ஒரு மூடி, சைக்கிளின் ஹேண்டில்பாரில் இடது பக்கம் சிறிய வாளியில் நீர், அதில் ஒரு குட்டி எவர்சில்வர் கப், ஓட்டலில் பட்டைசாதம் என்று அளவுச் சாப்பாடு தருவார்களே அந்த சைசில்.
ஒரு கப் மாவு 5 ரூபாய்! தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம், பணிபுரியும் பெண்கள், இல்லத்தரசிகள், திருமணமாகாது தனித்து வாழும் ஆண்கள் என பல தப்பினரும் அரிசி உளுந்து ஊறவைத்து அதை பவர்கட் வருவதற்குள் ஆட்டி எடுத்து, இப்படி சிரமப்படாமல் எளிதாக சமைக்க வீடு தேடி வரும் மாவு.
மகிழ்வோடு அனைவரும் வாங்குவார்கள் அல்லவா! காலமாற்றத்தில் மக்களது தேவை, அவர்களது தினசரி வேலைச் சுமை, நாட்டிலுள்ள மின் பற்றாக்குறை, வீட்டிலிருந்து மளிகைக் கடைக்கு நடந்து, போக விடாத சாமர்த்தியம், அதை விட அன்றாடம் நம் மக்களுக்கு தேவைப்படும் எளிய உணவு என இதற்கு ஐடியா பிடித்தவரை மார்க்கெட்டிங் சூரர் எனச் சொல்லலாம்.
காலை மாலை இரு வேளையும் வலம் வருகிறது இந்த மொபைல் இட்லி மாவு வியாபாரம்.அந்த வியாபாரியிடம் பேசினேன் நாள் ஒன்றுக்கு காலை மாலை இரு வேளையும் 800 ரூபாய், லாபமாக சம்பாதிக்கிறார்.. இவரது தம்பியும் ஒரு சைக்கிள் அவரது வருமானமும் 800 ரூபாய். ஆக நாள் ஒன்றுக்கு ₹1600 மாதம் 48000 ரூபாய். வீட்டில் 4 கிரைண்டர்கள் வைத்திருக்கிறாராம்.
Must Read: சென்னையில் நடைபெற உள்ள 2 வேளாண் நிகழ்வுகளை தவறவிடாதீர்…
அரிசிமில்லில் மொத்தமாக அரிசி வாங்குகிறார் உளுந்தும் அப்படியே வீட்டில் பெண்கள் மாவாட்டி வைக்க இவர்கள் அதை எடுத்துப் போய் வியாபாரம் செய்கின்றனர். காலை 7மணி முதல் 9:30 வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் தான் வேலை! பிற நேரங்களில்..வீட்டிலேயே வடை, பஜ்ஜி,போண்டா சுட்டு சட்னிகளோடு அப்பகுதி டீக்கடைகளுக்கு மொத்தமாக, சப்ளை செய்கிறார்கள்
அதில் வரும் வருமானம் தினசரி 2000 ரூபாய். என்ன கம்பெனி கிரைண்டர் வச்சு இருக்கிங்க அண்ணே என்றேன் அமிர்தா கிரைண்டருங்க என்றார். கூவிக்கூவி வெளிநாட்டு வேலைன்னு அழைக்கும் டுபாக்கூர் நிறுவனங்களில் படிக்காமலேயே மாதம் 60ஆயிரம் சம்பாதிக்கும் அந்த உழைப்புக்கு ஒரு ராயல்சல்யூட், நாட்டில் நேர்மையாக பிழைக்கத் தான் எவ்வளவு வழிகள்.! நேரமாச்சு வரட்டுங்களா” என்று கிளம்பி விட்டார்.. அந்த ஒலியை எழுப்பியபடி.
காதுகளில் ஒலிக்கிறது அந்த க்கிக்கிங்.. கீங்.. கீங்.. கீங்.. என்னும் கடின உழைப்பின் வெற்றிச் சத்தம்! “உங்களுக்கும் கேட்டிருக்குமே”
#idlibatterbusiness #ildlimavusales #maduraiidliflour
Comments