
சென்னையில் பிப்ரவரி 5ஆம் தேதி இயற்கை வேளாண்மை குறித்த நிகழ்வுகளை தவறவிடாதீர்
சென்னை தாம்பரத்தில் பிப்ரவரி 05ஆம் தேதி ஞாயிறு அன்று இயற்கை வேளாண் உழவர்கள் சந்தை விழாவானது வள்ளுவம் இயற்கை சந்தை - நம்மாழ்வார் மக்கள் குழு ஆகியவற்றால் நடத்தப்பட உள்ளது.
இதில் தூய இயற்கை உணவுகள், காய்கறி - கீரைகள் - பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள் - குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் - சமையல் மண்பாண்டங்கள் - துணி பைகள் - சணல் கைவினை பொருட்கள் - பனை ஓலை பொருட்கள் - சிற்பங்கள் - ஓவியங்கள் என இயற்கை சார்ந்த பொருட்களின் நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர்.
Must Read:மது, புகையை விட நினைப்பவர்கள் இனிப்புகள் ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா?
இந்த நிகழ்வின் போது ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை வடிவமைப்பு திரு. இரா.வெற்றிமாறன்.கலந்துரையாடுகிறார். குழந்தைகள், பெரியவர்களுக்கான மரபு விளையாட்டுகள் நடைபெற உள்ளன.இந்த நிகழ்வானது சென்னை.தாம்பரம் மேற்கு ( பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில்) , ஜி.எஸ்.டி சாலையில் உள்ள வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இயற்கை விவசாய பொருட்களின் சந்தையுடன் , இயற்கை உணவு / இயற்கை விவசாயம் / இயற்கை மருத்துவம் / சுற்றுச்சூழல் குறித்த ஆழமான கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் கொண்டாட்டமான பாரம்பரிய விளையாட்டுகள் நிகழும் .
இயற்கையில் விளைந்த தரமான உணவு பொருட்கள் கிடைக்கும்.பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள், சீர்தானியங்கள், தூய செக்கு எண்ணெய்கள், மசால் வகைகள் , மாவு - பொடி வகைகள் , மலைத்தேன்,மரபு திண்பண்டங்கள் , மரபு விளையாட்டு பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், நாட்டு விதைகள், இயற்கையில் மதிப்புக்கூட்டு பண்டங்கள் அனைத்தும் கிடைக்கும் .
அனுமதி இலவசம். அனைவரும் இதில் பங்கேற்கலாம். மேலும் தொடர்புக்கு : 9566667708 / 7448558447 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்வினை வெற்றிமாறன்.இரா ஒருங்கிணைக்கிறார்.
வளசரவாக்கத்தில் மாடிதோட்ட பயிற்சி
சென்னை வளசரவாக்கத்தில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி மாடி தோட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கோவை செஞ்சோலை அமைப்பைச் சேர்ந்த திரு.செந்தில்குமரன் பயிற்றுவிக்கிறார்.
"நாம் உண்ணக்கூடிய உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்" என்ற ஐயா நம்மாழ்வாரின் கூற்றுக்கான ஒரு செயல்திட்டமாக இந்த மாடித்தோட்டம் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களிலிலும் வீட்டுக்கு வீடு காய்கறித்தோட்டம் அமைத்து, முடிந்தளவிற்கு நமக்கான உணவை நச்சில்லாமல் உண்ணக்கூடிய ஓர் உன்னத இலக்கிற்கான முயற்சியாக இந்த மாடித்தோட்டம் குறித்த பயிற்சி அமையும் என நம்புகிறோம்.
மாடியில் மற்றும் வீட்டில் அமைக்கும் தோட்டத்திற்கான அணுகுமுறைகள், பொருட்கள் மற்றும் மண் தேர்வு செய்யும் முறை. தோட்டம் அமைப்பதற்கான அடிப்படை செயல்முறைகள். விதை தேர்வு, இடுபொருட்கள் தயாரிப்பு முறை, பராமரிப்பு, தண்ணீர் சேமிப்பு, தோட்டத்திலிருந்து விதைகள் எடுத்து சேமிக்கும் முறை என அனைத்தையும் அனுபவ பகிர்வோடு, மிகத்தெளிவாக எடுத்துரைக்கும் முயற்சியாக இருக்கும்.
Must Read: சிபிஆர் சிகிச்சை மேற்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்…
இந்த முறை, பயிற்சியில் பங்கு பெறும் நண்பர்களின் வீடுகளில் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனை வழங்கி, இதன் தொடர்ச்சியாக அந்த தோட்டத்தின் படிப்படியான வளர்ச்சிகளை பதிவு செய்து, மற்றவர்களுக்கு அனுபவபூர்வமான தகவல்களையும் பகிரப்போகிறோம்..
சென்னையை சேர்ந்த தில்லியம் எனும் இயற்கை வேளாண் சமூக அமைப்பு இந்த பயிற்சி முகாமை ஒருங்கிணைக்கிறது. பயிற்சி கட்டணமாக 500 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. மதிய உணவு, தேநீர், எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முகாமில் பங்கேற்க மோ. அறிவழகன் அவர்களை 95000 38385 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். முன்பதிவு அவசியம்.
#நம்மாழ்வார்_மக்கள்_குழு #வள்ளுவம்_இயற்கை_சந்தை
#Nammalvar_people_forum #organicfarming #organicmarketing #naturefood
#terrecegardentraining #terrecegarden #eventsinchennai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments