
திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் வெற்றிக்கதை
திண்டுக்கல் நகரம் பூட்டு தயாரிப்புக்கு மட்டுமின்றி, தலப்பாகட்டி பிரியாணிக்கும் புகழ் பெற்றது. திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையில் 1957-ம் ஆண்டு நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்த விலாஸ் பிரியாணி என்ற பெயரில் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார்.
நாகசாமி நாயுடுவின் தலப்பா கட்டு
நாகசாமி நாயுடு தமது தலையில் தலப்பா கட்டி இருப்பார். அதனால், இவரது உணவகத்தை தலப்பாகட்டி பிரியாணி கடை என்று திண்டுக்கல் மக்கள் செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர்.
Must Read:ஆவின் பால் பாக்கெட்டுக்குள் ஈ போனது எப்படி?
இந்தப் பெயரே நிலைத்து நின்று தலப்பாகட்டி பிரியாணி என்ற என்ற அடையாளம்தான் இப்போது அந்த கடையின் உலகாளவிய வணிக முத்திரையாக மாறிப்போனது.
சீரகசம்பா, மசாலா, இறைச்சி
தலப்பாட்டி கட்டி பிரியாணிக்கு என்ற ஒரு தனி சுவை என்றுமே நிலைத்து நிற்கிறது. அதற்கு காரணம் மற்றவர்கள் எல்லாம் பிரியாணி அரிசி என்று அழைக்கப்படும் பாசுமதி அரிசியில் பிரியாணி தயாரிக்கின்றனர்.
ஆனால், தலைப்பாகட்டி பிரியாணியின் வித்தியாசமான சுவைக்கு முக்கிய காரணமாக இருப்பது சீரக சம்மா அரிசியில்தான் அவர்கள் பிரியாணி தயாரிக்கின்றனர்.
தங்களது பிரியாணியில் ரெடிமேட் மசாலா பொருட்களை அவர்கள் ஒருபோதும் சேர்ப்பதில்லை. மாறாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தரம் வாய்ந்த மசாலாப் பொருட்களை வாங்கி அரைத்து அந்த மசாலாக்களை மட்டுமே பிரியாணியில் தலைப்பாட்டி நிறுவனத்தினர் சேர்க்கின்றனர்.
அதே போல மட்டன் பிரியாணியில் அவர்கள் பயன்படுத்தும் கறியும் வித்தியாசமான சுவையுடையதாகும். கன்னிவாடி, பரமத்தி போன்ற சந்தைகளில் வாங்கப்படும் கோழி, ஆடு ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட தரமான இறைச்சி வகைகளை மட்டுமே தலைப்பா கட்டி பிரியாணி நிறுவனத்தினர் பயன்படுத்துகின்றனர். சீரகசம்பா அரிசி, தனித்த மசாலா தயாரிப்பு, தரமான இறைச்சி ஆகியவை இவற்றுடன் சமைக்கும் பக்குவமும் தலப்பா கட்டி பிரியாணியின் சுவைக்கு முக்கிய காரணங்களாகும். இந்த தனித்தன்மையே இன்றளவும் வாடிக்கையாளர்களை தலப்பாகட்டி நிறுவனம் ஈர்க்கின்றது. .
தலப்பாக்கட்டி பெயர் சேர்ந்தது
தலப்பாகட்டி பிரியாணி கடையை தொடங்கிய நாகசாமி நாயுடு கடந்த 1978ம் ஆண்டு இறந்து விட்டார். அதன் பின்னர் ஆனந்தவிலாஸ் பிரியாணி உணவகம் என்பது தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸ் பிரியாணி உணவகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாகசாமியின் வாரிசுகள் இப்போது திண்டுக்கல் மட்டுமின்றி உலகம் முழுவதும் தலப்பாகட்டி பிரியாணி உணவகங்களை நடத்தி வருகின்றனர்.
Must Read: உலக ரோஜா தினத்தில் புற்றுநோயாளிகளின் நலனுக்காக சிந்திக்கலாம்…
முதலில் திண்டுக்கல்லில் தொடங்கப்பட்ட தலப்பாகட்டி பிரியாணி உணவகம் பிரபலம் அடைய திரைபிரபலங்களும் ஒரு காரணம். . திண்டுக்கல் வரும்போதெல்லாம் அந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலப்பாகட்டி பிரியாணியை சுவைக்கத் தவறுவதில்லை.
திண்டுக்கல் வழியாக கார் அல்லது ரயிலில் பயணிக்கும் பிரபலங்கள் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கும் வந்து செல்வது வாடிக்கையானது. நாளுக்கு நாள் தலப்பாக்கட்டியின் செல்வாக்கு அதிகரித்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திண்டுக்கல்லுக்கு வெளியேவும் கடைகள் திறக்க ஆரம்பித்தனர்.
உலகெங்கும் பிரியாணி
தமிழகம் முழுவதும் அதன் கிளைகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. இப்போது வரை 65க்கும் மேற்பட்ட இடங்களில் தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, இலங்கை, அமெரிக்கா நாடுகளிலும் தலப்பா கட்டி உணவங்கள் திறக்கப்பட்டு சர்வதேச அளவில் சுவையின் ஆதிக்கத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தலப்பாக்கட்டி உணவகங்கள் மூலம் தினசரி 4000 கிலோவுக்கும் அதிகமாக பிரியாணி தயாரிக்கப்படுகின்றது.
-ரமணி
படங்கள் நன்றி; தலப்பாகட்டி உணவகத்தின் இணையதளம்
#DindigulThalappakattiRestaurant #ThalappakattiRestaurant #ThalappakattiBriyani
Comments