எந்தெந்த காய்கறிகள் உங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தெரியுமா?
இயற்கையாகவே உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகள் உங்கள் உடல் நலத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொற்றுநோயின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல மரணங்கள் நிகழ்ந்ததை நாம் மறந்து விட முடியாது. அவர்களில் நம் நெருக்கிய உறவினர்கள் கூட இருந்திருக்கலாம். இங்கே நாம் குறிப்பிடும் தினந்தோறும் நாம் உண்ணக்கூடிய உணவுகள் ஆக்ஸிஜன் அளவைப் பராமரிக்க உதவுகின்றன.
நம் உடலில் ஒடும் ரத்த ஒட்டமானது, ஆக்ஸிஜன் மற்றும் பிற முக்கிய கூறுகளை எடுத்துச் செல்லும் கேரியர் ஆக செயல்படுகிறது. ஆக்சிஜன், நுண்ணூட்ட சத்துகள் ஆகியவை நம் உடலின் உயிரணுக்களில்(செல்கள்) இயங்கி அதில் இருந்து வளர்சிதை மாற்றக் கழிவுகளை பிரிக்கும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படியுங்கள்; சாப்பிடுகின்றவர்களின் திருப்தி முக்கியம்…. 50 ரூபாய்க்கு அளவற்ற உணவு வழங்கும் செந்தில்குமார்..
நம் உடலின் முக்கிய செயல்பாடுகள் தடையின்றி தொடர்ந்து செயல்படவும், வலுவான வெள்ளை ரத்த அணுக்கள் உருவாகி, சுற்றுச்சூழலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்து இயற்கையாகவே நம் உடல் போராடுவதற்கு உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான ரத்தம் தேவைப்படுகிறது.
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று, நம் உணவில் நாம் குறிப்பிடும் உணவுகளை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை இந்த உணவுகள் அளிக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட்ஸ் போன்ற வேர் காய்கறிகளில் தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும் பீட்ரூட்கள் சிறந்தவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இரும்பு, ஃபோலேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் கலவைகள் பீட்ரூட்டில் உள்ளன. இவை ரத்தத்தை சுத்திகரிக்கவும் இயற்கையாகவே உடலில் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் என்னவென்றால், கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க பீட்ரூட் சாறு உதவி புரிகிறது.
மாதுளை
வாஸோடைலேட்டர்கள் என அழைக்கப்படும் பாலிபீனால் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நன்மைகளால் மாதுளை நிரம்பியுள்ளது, ரத்தம் கட்டியாவதை தடுக்கிறது. ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை ரத்த நாளங்களில் சீராக ஓடுவதை உறுதி செய்கின்றன, மாதுளையில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொட்டாசியத்தை அதிகரிக்க உதவுகிறது , இது இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
பெர்ரி
இனிப்பு மற்றும் புளிப்பு பெர்ரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஏற்றது. அவற்றின் துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த கலவை இயற்கையாகவே ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, இது ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை
இந்த பழங்கால மசாலா அற்புதமான குணப்படுத்தும் விளைவுகளைக் கொண்டுள்ளது, இதனை தேநீர் கலவைகள், சூப்கள் மற்றும் சாலட்களில் சிறிய அளவைச் சேர்ப்பது நம் உடலில் இயற்கையாகவே ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும், இந்த மசாலா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
பூண்டு
நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், செரிமானத்தை மேம்படுத்துதல் என ரத்த சுழற்சியை அதிகரிப்பது வரை பூண்டு நிறைய ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. தினமும் பூண்டு சாப்பிடுவது மோசமான கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
-பா.கனீஸ்வரி
#FoodsForBloodCirculation #FoodsForBloodIncrease #FoodForOxigen #HealthyFoods

Comments
View More