
உணவு மதிப்பு கூட்டு முறைகளை அரசே கற்றுத்தர வேண்டும்…
திருவாரூர் நகரில் நடைபெற்ற நடப்பு ஆண்டின் தேசிய பாரம்பரிய நெல் மாநாடுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் அதன் மதிப்பு கூட்டு & சந்தைப்படுத்துதல் குறித்து கருத்துரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன் .
விவசாயிகளின் விளைபொருளுக்கான அடிப்படை ஆதார விலை இதுவரை இல்லாததே விவசாயிகளின் வறுமைக்கும் அதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது . இப்படியாக நம் விவசாயிகள் வெளியேற்றப்பட்டு விட்டு நமக்கான உணவு உற்பத்தியை முழுக்க பெருநிறுவன வேளாண் தொழில் குழுக்களிடம் கையளித்துவிட்டு நம் அடுத்த தலைமுறை உணவுக்கு கையேந்தி அடிமையாகும் அவலநிலைக்கு இட்டுசெல்லும் ஆபத்திலிருந்து விழித்துக் கொள்வோம் .
Must Read: கரிசலாங்கன்னி லட்டு ருசித்திருக்கிறீர்களா?
உழவர்களுக்கான உழவர் சந்தை அமைப்புகளை அதிகாரம் மையங்களின் தலையீடுகளின்றி அதன் அடிப்படையில் நோக்கத்தில் இருந்து உழவர் சந்தைகளை சீர்படுத்தி நேரடி விவசாயிகள் பலன் பெறும் வகையில் வழிவகை செய்வதோடு அங்கே இயற்கை விவசாய குழுக்களுக்கான நேரடி சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
இங்கே நமது நுகர்வோருக்கும் இயற்கையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி, சிறுதானியம், காய்கறிகள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் சென்றடையவில்லை அப்படியான விழிப்புணர்வு வேலைகளை சமூக நலம் சார்ந்து இயங்கும் இயக்கங்களுடன் சேர்ந்து தமிழக அரசும் உறுதுணையாய் நின்று செயல்பட வேண்டும்.
பாரம்பரிய உணவுகளின் மதிப்பு கூட்டு முறைகளை கிராமம்தோறும் மகளிர் குழுக்கள் அமைப்புகளுக்கு சரியான பயிற்சி மையங்களை நிறுவி அரசே முன்வந்து கற்றளிக்க வேண்டும்.
Must Read: வானகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நம்மாழ்வாரின் 85 வது பிறந்தநாள் விழா
இதன் வழியான தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பை தமிழக அரசு தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாய முன்னோடிகள் மற்றும் தொழில் முனைவோரின் ஆலோசனைகளின் வழியே செயல்படுத்திட வேண்டும். இவ்வராக பேச எண்ணியிருந்த ஏனைய விஷயங்களில் இருந்து சில கருத்துக்களை கோரிக்கைகளையும் முன் வைத்து பேசி வலியுறுத்தியுள்ளேன் .
இனிதே நிறைவடைந்த கீரை சாகுபடிப்பயிற்சி
கோவை #மாதம்பட்டியில் செஞ்சோலை நடத்திய இயற்கைவழியில் கீரை சாகுபடி நேரடிக் களப்பயிற்சி இனிதே நிறைவடைந்தது. கடந்த 19ஆம் தேதி ஞாயிறு மாதம்பட்டி பண்ணையின் #பொருப்பாளர் திரு.சந்தோஷ் அவர்கள் பயிற்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.
பயிற்சியில், பாத்தி அமைத்தல், விதை அளவு-விதைக்கும் முறை நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு , தொடர் அறுவடை நுட்பங்கள் ஆகியவை குறித்து செயல்விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன.
- வெற்றிமாறன் இரா ( 9566667708) , செந்தில் குமரன் (956666 5654 )
#organicfarming #farmingtraning #agritraning
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, நம்மாழ்வார் பிறந்தநாள், தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments