
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் மஞ்சள் பூசணியை உணவில் சேர்க்க மறக்க வேண்டாம்...
நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே சில மாற்றங்களை செய்து கொண்டால் நம் உடல் நலனைப் பேண முடியும். உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் மஞ்சள் பூசணியை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். சிறுநீரகக்கோளாறு போன்றவற்றுக்கு வெள்ளை பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பரங்கி கொடி.(Pumpkin)
வயல்வெளிகளில் தோட்டங்களில் வளர்ந்திருக்கும் படர்கொடி நீ!சர்க்கரைப்பூசணி, சர்க்கரைப் பறங்கி, மஞ்சள்பூசணி எனப்பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் பசுமை கொடி நீ! மென்மையான மயக்கமூட்டிநீ
Also Read: மென்சஸ் பிரச்னை தீர ஆடுதீண்டாப்பாளை சாறு...
காய்ச்சல் ,தீப்புண்கள் கொப்புளம்,சிறுநீர் பெருக்கம் நாடாப் புழுக்கள் மற்றும் வயிற்றுப்பூச்சிகள், பித்தப்பை கோளாறு, மலச்சிக்கல், வீக்கம் தூக்கமின்மை,கொழுப்பு குறைப்பு ,உயர் ரத்த அழுத்தம் உடல் சூடு,கல்லீரல்,முடி உதிர்வு,மூலநோய் முகக்கரும்புள்ளி,சளி, காய்ச்சல்ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
குழம்பு,கூட்டு பொரியல்,மசாலா,சூரணம் எனப்பல்வகையில் பயன்படும் நல்வகை காய் கொடி நீ!ஒற்றைதலைவலிக்கு எண்ணெய் தரும் வித்தை கொடியே!குளிர்ச்சி மிகுந்த காய் கொடியே!சுண்ணாம்பு சத்து மிகக் கொண்ட குண்டுக்காய்கொடியே! பொங்கல்பண்டிகை யின் படையல் காயே!ஏக்கருக்கு 30 டன் காய்கள் கொடுக்கும் வேளாண்கொடியே! சுமார் மூன்று லட்சம் வரை லாபம் தரும் பணப்பயிரே!
வெண்பூசணிக்கொடி (White pumpkin)
வட அமெரிக்கா உன் தாயகம்! மணல் கலந்த களிமண் நிலத்தில் வளரும் கொடித் தாவரம் நீ!
ஆயுர்வேதத்தில் நீ “கூஷ்மாண்டம்.” தலைவலி, நெஞ்சுவலி,மூச்சிரைப்பு, சிறுநீரகக்கோளாறு,வயிற்று நாடாப்புழுக்கள்,குடற்புண், உடல் எடை குறைப்பு, கண் பார்வை,இரத்த சுத்தகரிப்பு, நுரையீரல் நோய்,வாந்தி, தலைசுற்றல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
Also Read: ஆடாதோடை சாறு, தேன் கலந்து குடித்தால் மூச்சு திணறல் சரியாகும்...
சாம்பார்,மோர்க்குழம்புகறி,ரசம்,அல்வா,சூப்,சாறு என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல காய்க் கொடியே!அமாவாசைபடையலுக்குக் காய் கொடுக்கும் கவின்கொடியே!
சீன மருத்துவத்தில் மஞ்சள் காமாலை,சீதபேதி, இருமலுக்குப்பூ கொடுக்கும் பூங்கொடியே! ஐந்து பிளவுகளைக் கொண்ட அழகியஇலைக்கொடியே! உருண்டை வடிவ காய் கொடுக்கும் உன்னத கொடியே!மருந்தாகவும்உணவாகவும் பயன்படும் மகிமை கூடிய!நார்ச்சத்து மிகுந்த நற்கொடியே! கண் திருஷ்டியை போக்கும்வெண்பூசணியே! ஹெக்டேருக்கு 20.டன் வரை காய் கொடுக்கும் பணப்பயிரே! 80. நாட்களில் பலன்கொடுக்கும் பணப் பயிரே
இறைவழிபாட்டின் தெய்வீக்கனியே! ஆண்மை சக்தியை அதிகரிக்கும் விதை கொடியே!தமிழர்களின் பாரம்பரிய உணவே!
-பேரா.முனைவர்.ச.தியாகராஜன் நெய்வேலி.9443405050.
#PumpkinBenefits #PattiVaithiyam #HealthyPumpkin
Comments