காலை உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி, அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகும். இது நாள் முழுவதும் நமக்கு ஆற்றலை அளிக்கிறது. பெரும்பாலான உடற்பயிற்சி நிபுணர்கள் நிறைய ஊட்டச்சத்துக்களுடன் கூடிய உணவை பரிந்துரைக்கின்றனர்.
தாய்ப்பாலின் முக்கியத்துவம், தாய்ப்பாலை தவிர்த்துவிட்டு புட்டிப்பாலை அறிமுகப்படுத்த வணிகப் பெருநிறுவனங்கள் மேற்கொண்ட அறமில்லா முயற்சி, மாட்டுப்பாலிற்கு பின் இருக்கும் அரசியல் என அணுஅணுவாய் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது பால் அரசியல்
காய்கறிகளில் மிகவும் விலை மலிவானவை கீரைகள்தான். ஆனால், அதன் மருத்துவ குணங்கள் அளவிடமுடியாதவை. கீரைகள் உண்பதால் நமது உடலில் இருக்கக் கூடிய ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு இன்றி சமநிலையில் செயல்பட உதவுகின்றன.
அவல் என்பது மிகவும் எளிதான ஆனால், மிகவும் சத்து வாய்ந்த உணவு. இப்போதைய வாழ்க்கை சூழலில் வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் நாம் அவல் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது. கொரோனா தொற்று போன்றவற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் அவல் சிறப்பான உணவு.
ஒரு கப் காபி நம் மூடை மாற்றி சந்தோஷப்படுத்தும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை மறுப்பதற்கில்லை, ஒரு கப் காபியானது எடை, மன அழுத்தத்தை நிர்வகிக்க, சோர்வை நீக்க உதவுகிறது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா?
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும்… தேங்காயை உணவில் கொஞ்சம் சேர்த்தால் கூட ‘Bad cholesterol’ (கெட்ட கொழுப்பு) அதிகமாகிவிடும்…’ என்று பல வணிக நிறுவனங்கள் தங்கள் லாப நோக்கத்திற்காக சில காலமாக பொய்ப் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலிலும், தேங்காயின் பெருமையைப் போற்றி அதற்கென ஒரு விழாவே தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை - உண்மையில், இணையத்தில் கிடைக்கும் ஆரோக்கியம் மற்றும் உணவு தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் நம்மை குழப்பமடையச் செய்து, நம் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்று நம்மை தடுமாற வைக்கின்றன.
நமது சீரற்ற உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றால்தான் பல நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன.சிறுநீரகத்தில் கல் உருவாவது கூட உணவு பழக்கத்தின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.
தொண்டையில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது டான்சில். இது வயது வித்தியாசமின்றி பலருக்கும் வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நடுத்தர வயதினர், முதிய வயதினர் எல்லோருக்கும் வருகிறது.
வழக்கமாக வீட்டிலேயே உணவு உண்டு சலிப்பை உணரும் பலர் ரெஸ்டாரெண்ட் சென்று குடும்பத்தோடு உணவு உண்ணுவதை அல்லது நண்பர்களோடு சென்று உணவு உண்பதை பெரும்பாலும் விரும்புவது வழக்கம்.
பெரிய தம்பி என்ற அனுபவத்திலும், வயதிலும் மூத்த சமையல் கலைஞருக்கு அவரது பேரன்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றனர் தங்களது வில்லேஜ் குக்கிங் சேனல் வாயிலாக.
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போதும், இரண்டாவது அலையின்போதும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது உணவு தொழில்தான். குறிப்பாக ரெஸ்டாரெண்ட்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றதால் ரெஸ்டாரெண்ட்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.












